Romantic Couple

Romantic Couple
Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu

Saturday, November 6, 2010

To My Chinnu :)

எந்தன் முகவரி துலைத்தேன் உன்னாலே
என்னை முற்றிலும் மறந்தேன் அதனாலே

உன்மேல் இச்சை கொள்வது எதனலே
உன்னை காதலிக்க முனைந்தேன் அதனாலே

To my Lovly Chinnu :)

மிகவும் அழகான கவிதை
அற்தமுள்ள  கவிதை
கற்பனை இல்லா கவிதை
குறை சொல்ல கவிதை
மனதில் நிற்கும் கவிதை
மாற்றமில்ல கவிதை
என்னவனின் பெயர் தான்
மீண்டும் சொல்ல்வேன்

To My Chinnu :)

உன்னை போல் ஒருவனை கண்டது இல்லை
   அப்படி கண்டாலும் அவன் உன்னை போல் இல்லை ...

( I never seen guy like you, if I have seen he is not like You... )

கனவுகள் எதுவும் வந்ததில்லை
அப்படி  வந்தாலும் அதில் உன்னை தவிர  எவரும் இல்லை

(I never get dream, thought I get dream it’s all about you.......)

வெட்கம் எனக்கு வந்தது இல்லை
அப்படி வந்தாலும் அது உன்னை தவிர யாருக்கும்  சொந்தம் இல்லை
(I never get shy; even if I get you are the proprietors (Owner) of my shy.........)

காதல்  எனக்கு வந்ததில்லை
அப்படி வந்தாலும் அது உன்னை தவிர யாருக்கும்  இல்லை

(I never feel to love any one , even if am going to "none/no other then you")

Sunday, October 17, 2010

என்னவனே ...

என்னவனே ...

உன் மொழி நான் அறியேன்
என் மொழி நீ அறியாய்
நம் கண்கள் பேசும் மொழி யாவது
என்று யாரும் அறியார்

நான் தூரம் நின்ற போது
துரத்திய உன் நினைவுகள்
அருகில் வந்த போது அழகாய்
ரசிக்க செய்தது .........

பக்கம் வந்து நீ என்னை பார்த்திட
தொண்டை குழிக்குள் கலவரம்
கண்விழிகளால் என்னை  ஈர்த்திட
கற்பனையில் ஓர் ஊர்வலம்
புன்சிரிப்பால் நீ என்னிடம் பேசிட
உன்னுள் புதைந்து போன என் நிலவரம்

யாரிடம் சொல்ல யாருக்கு யார் என ?

உன் மனதில் என் ஞாபகங்கள் 
என் கனவில்  உன் நினைவுகள் 

மாய உணர்வுகளில் சிக்கிகொண்ட
நாம் இருவரும் என்றும் மறைய போவதில்லை

பிரிந்தாலும் நாம் சேர்ந்து கொள்வோம்
நம் கனவுகளிலே...

மறைந்தாலும் வாழ்ந்திடுவோம்
நம் உணர்வுகளிலே  ... I am Always dream about you da mama :)

Sunday, October 10, 2010

To my Lovly Chinnu :)

வேண்டாம் என இதல்கள்
   பொய் உரைத்தாலும்
மனம் வேண்டும்  என
   உன்னை கேட்கிறதே
என்ன செய்வது என் கள்வனே
  குற்றமில்ல என் இதயம்
குறையில்லாமல் உன்னை காதலிகின்றதே......:)

Sunday, October 3, 2010

என் உயிர் தோழி - வனிதா

தேனினும் இனியது
                  அவளது குரல்
மலரினும் மென்மையானது
                  அவளது மனம்
பூக்களிலே மிகவும்  அழகானது
                   அவளது  புன்னகை
நிலவினும் குளிர்ச்சியானது
                   அவளது  முகம்
காற்றிலும் சுகமானது
                   அவளது  நப்பு
பெண்ணின் இலக்கணமாய்
 இலக்கணத்தின்  இலக்கியமாய்
இலக்கியத்தின்  ஓவியமாய்
 ஓவியத்தின்  உயிராய்
உயிரின் உணர்வாய் - என்னுள் இருக்கிறாள்
                         என் உயிர் தோழி    வனிதா

Thursday, September 30, 2010

நவீன தொழில் நுட்பம் - New Technology :)

நவீன தொழில் நுட்பம்

கற்பனையில் ஓர் வரம் அறிவியலாய் ஆனது
கற்றரிந்த  சான்றோருக்கு அது இயல்பாய் போனது
மதியினை கொண்டு விதியினை மாற்றிட
சதியினை கொண்டு சரித்திரம் படைத்திட
சங்கடம்  எதும்   இன்றி சந்தோஷம்  வந்திட
நம் வாழ்வினை மாற்றிடும் நவீன தலைமுறை
சோதனையின் கொம்பை முறித்த சாதனை தலைமுறை.........:)

Monday, September 27, 2010

Donde estas mi Amor - esta noche para Ud. con amigo...................:)


Rose Images
Rose Scraps, Rose Day Graphics, Rose Day Comments and Glitter Graphics

Beautiful Orkut Scraps - Goodlightscraps.com

உன் மேல்  நான் வரையும் காயங்கள்
                         -   ரணமா  ? வரமா ?
ரணமெனில் முத்தமழையில்
    நினைந்து கொள்ளலாம்
வரமெனில் அழிய ஓவியங்கள்
      வரைந்து கொள்ளலாம்

Naa Chinnu :)

தேடுகிறதே காண்கள்
யோசிகிறதே இதயம்
நகர்கிறதே நாட்கள
தவிக்கிறதே நெஞ்சம்
எங்கே இருகிறாய் என்னவனே 

Wednesday, September 8, 2010

My Dear Kutta :)


Rose Images
Rose Scraps, Rose Day Graphics, Rose Day Comments and Glitter Graphics

Beautiful Orkut Scraps - Goodlightscraps.com



என்று வருவாயோ என்னவனே
எங்கே நீ என உன்னை தேட
உண்ணவின்றி உறக்கமின்றி
உறைந்தே போனேன் உன் உணர்வுகளால்

ಇಸ್ ಇಟ್ ಫಸ್ಟ್ ನೈಟ್ ........? ಇ ಅಂ ಸಿ The one & only for my dream Chinnu :)







Rose Images
Rose Scraps, Rose Day Graphics, Rose Day Comments and Glitter Graphics


Beautiful Orkut Scraps - Goodlightscraps.com




வெட்கத்தை கழட்ட  சொன்னான்
வேகத்தை கூட்ட சொன்னான்
நாணத்தை நகைக்க செய்தான்
தேகத்தை ருசிக்க செய்தான்
மிச்சத்தை கொடுக்க சொன்னான்
கெஞ்சலுக்கு வட்டி போட்டு
கொஞ்சலை முதலாய் கேட்கிறான்
முத்தத்தை மாலையாக்கி
மோகத்தை போர்வையாய் சூட்ட செய்தான்
களவு போன அந்நேரம் காணவில்லை எங்களை
திருடிய பொருள் என்னவோ
திரும்பி  தந்தது அவன் உயிரை தான்
நான் நீ என்ற வார்த்தைக்கு நாம் ஆக

Ho .........ಇಸ್ ಇಟ್ ಫಸ್ಟ್ ನೈಟ್ ........? ಇ ಅಂ ಸಿ.........es primero noche.........soy tímido

ಮೈ ಸ್ವೀಟ್ ದ್ರೆಂ ಕುತ್ತ

உன்னை பார்க்கும் போதெல்லாம்
   என்னில் கவிதை பிறக்கின்றதே
உன் நினைவுகளை சுமக்கும் போதெல்லாம்
என் கற்பனை சுவைகின்றதே
என்னை என்ன செய்தாயோ ...............?

Dear ಚಿನ್ನು ಮಾಮ








ஒரு மனம் கொண்டு
இரு கரங்களால்
முன்று முடிச்சி போட்டவன்

Monday, August 30, 2010

To My Sweet Kutta (Chinnu)

கவிதைகள் பிறக்கின்றது உன்னை நினைக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
மனதில் அழியாதது உன் முகம்
நினைவில் மறையாதது உன் புன்னகை
பிரிந்தே நீ போனாலும் பிரிவே இல்லை உன் நினைவுகளுக்கு

Sunday, August 15, 2010

Chinnu :)


ஒரு தலை வேட்கம் என் காதலை சொல்ல
தொண்டை குளிக்கு மேல் வார்த்தைகள் வரவில்லை
நாணம் கொண்டு உள்ளே சென்றது .
நானும் மறைந்து நின்றேன் என் அண்ணனின் பின்னால்...........


ஒரு கணம் உன்னை பார்க்க
மறு கணம் என்னில் தடுமாற
தவறி போனது என் இயல்புநிலை


பழைய பாடல்கள் கேட்டது இல்லை
கண்ணதாசன் கவிதைகள் படித்ததும் இல்லை
எட்டா துரத்தில் இருந்த என் தமிழ் பாடம் இன்று இனிக்கின்றதே .........உன்னால்


சுகந்திர வானில் சிறகடித்தவள்
சுகமாய் உன்னை நினைத்து கவிதைகள் எழுதுகின்றேன்

செல்லமாய் உன்னை கொஞ்ச நெஞ்சம் கெஞ்சிகின்றதே

என்ன செய்வது
என் தயக்க நிலையா இல்லை
என் மயக்க நிலையா


Chinnu :)


Thursday, August 12, 2010


துருவங்களின் காதல் உன்கண்களில் கண்டேன்

Hahu Thukka Masth Preeth Kartha - cómo decir ?


என்னில் வந்து மறைந்து கொண்டு
என் நினைவுகளில் ஒளிந்து கொண்டாய்

மின்னலாய் மின்னுகின்றாய்
தென்றலாய் தீண்டுகின்றாய்

மெல்ல நான் தொட்டதும் தீயாய் சுடுகின்றாயே

என்று மாறும் இந்த வானிலை......
உன்னால் வாடியது என் மனநிலை

எவ்விதம் சொல்ல என் காதலை
அர்த்தம் புரியாமல் தவிக்கிறேன்
தடைகளை மீறி சொல்லுவதால்
குறைகள் ஒன்றும் இல்லை எனில்
உடனே வந்து கூறிடுவேன்
உன்னவள் ஆக ஆவல் கொள்கிறேன் என்று...........:)

Tuesday, August 10, 2010


கொஞ்சி பேசிடும் உன் பார்வையில் புன்னகை பூக்குதே
கெஞ்சி நான் கேட்பதலோ

Monday, August 9, 2010


நீ கோபம் கொண்டாலும் உன்மேல் காதல் கொள்வேன்
நீ குறைகள் சொன்னாலும் நிறைகள் செய்வேன்
மௌனமாக ஒரு முறை சொல் நான் உன்னவள் என்று
மறுபடியும் வெட்கம் கொள்ள ...............

con él


இதலினும் மென்மையான காதல் கொண்டவள் நான்
முள்ளினும் கூர்மையான நேசம் கொண்டவன் நீ

ஒரு கரம் கொண்டு அரைந்தாலும்,
இரு கரம் கொண்டு அணைத்திடுவாய்
என்று தருவாய் அந்த சுகம் என்று எண்ணி நான் வாழ்கிறேன் :)


முன்னே கோபம் கொண்டு பின்னே குணம் கொண்டாய்
ரணம் தந்து வரம் தந்தாயோ
சுமையும் சுகம் தான் நாம் காதலில்
கண்ணீரும் தித்திக்கும்.................உன் நினைவில் வருவதாலே

Sunday, August 8, 2010

என்னவனை கொஞ்சும் போது


கொங்கு தமிழ் பேசும் என் சிங்க தமிழனே
உன் சிரிப்பு அழகுதான்
உன் கோபம் அழகு தான்
உன் கிறுக்கல்கள் அழகு தான்
என் காதலின் பித்தே நீ மட்டும் தான் என் எந்தனின் அழகு

உன்னை சந்தித்த அன் நிமிடம் ..........



காலங்களில் மாற்றமோ
நிமிடங்களில் தடுமாற்றமோ
நொடிகளின் கலக்கமோ
நான் என்னை துறந்து உன்னை ஏற்க
பயணிக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் கடினம் தான் நீ அருகில் இல்லாதால்
கண்ணோடு கண் சேரும் அன் நேரம் அப்படியே நின்று போனால் என்ன

என்னை என்ன செய்தாய் கள்வனே ........


தமிழின் சுவை அறியேன்
பொய்யின் மெய் அறியேன்
கவிதையின் பதம் அறியேன்
இசையின் சுரம் அறியேன்
காதலின் மொழி அறியேன்
என் குறும்பின் அழகே
உன்னை மட்டும்மே நான்அறிந்து கொல்ல நீ என்ன செய்தாய்...... உன் விழிகளில் ???:)

Viraaha - தனிமையில் அவன் நினைவுகள்


என்னவனின் கால் சட்டைக்குள் பயணித்த போது
கரைந்தே போனது மனம்
கவிதை எழுத சொல்லுதே தினம்
கண்ணும் இதயமும் மோதிக்கொண்டு காதல் பிறந்தது ஏனோ .........
உயிரும் மெய்யும் பேசிக்கொண்டு உணர்சிகள் வந்தது ஏனோ........
உன் நினைவுகள் என்னில் புரட்சிகள் செய்வதும் ஏனோ.........
உறைந்த உன் நாபகங்களில் உருகி போவதும் ஏனோ.........
துடிக்கிறதே மனம் நீ பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
ஏங்கி தவிக்கின்றதே தினம் எங்கோ நீ என
என்னுள் உதித்த உனக்கு என்றும் அழிவே இல்லை
நான் வரைந்த அழியாஓவியமே .........

Tuesday, August 3, 2010

Mathula :)



தோள்கொடுக்க தோழன் இருக்கையில் தோல்விகள்
இனி எனக்கு இல்லை

கைகொடுக்க என்னவன் இருக்கையில்
கவலைகள் இனி எனக்கு இல்லை

சோதனையின் கொம்பினை முறித்து
சாதனை செய்ய தூண்டியவன் .....

என் என்னும் முன்னமே எண்ணங்களை உணர்ந்தவன்
கற்பனையை களையறுத்து விற்பனை செய்தவன்

பூ போல் என்னை சுமக்க போர்க்களம் பல கண்டவன்

நான் காணமல் போனாலும் என் கண்முன்னே நின்றிடுவான்
கவிதையாய் பிறந்து கனவுகளில் வந்தவன்

இன்றோ இருகரம் பிடித்து என்னவன் என்கின்றான்
கற்பனையில் வடித்தவனை என் கணவனாக காணுகிறேன் ...........:)

Monday, August 2, 2010

Chinnu :)




அழகாய் இதல்களை முத்தமிட
செல்லமாய் குத்தியது அவனது மீசை :):):)

Saturday, July 31, 2010

To My Sweet Kutta







தொலைபேசி உரையாடலில்
தொலைந்த போது
முத்தமழை என் cell phoneக்கு
அவன் குரல் கேட்டதால் .........:)

இது வரமா ? சாபமா? - மாமா




இது வரமா ? சாபமா? - மாமா

நித்திரையிலும் உன் கனவு
யாத்திரையிலும் உன் நினைவு
யாசகம் கேட்டு இருகிறேன் என்றும் நான் உன்னவளாய் இருக்க ...........
உண்மை சொன்னால் நேசிபாயா உன் சுவாச காற்றாயாய் என்னை சுவாசிப்பாயா ?

Friday, July 30, 2010

தடுமாற்றம் ...........



என்னவன் நீ இல்லை என்றால்
உன்னை நினைப்பது ஏனோ.......
வார்த்தைகளில் சுழற்றியது ஏனோ.......
மனதினை கலைத்ததும் ஏனோ.......
பிரிவினை வந்ததும் ஏனோ......
கற்றது இனிமை
புரிந்தது உண்மை

அழகாய் வரைந்தது அவசரத்தில் கரைந்ததே
என் மனதில் இட்ட கோலம்

Esta noche...........para Ud...100% Dream..........:) ಅಟ್ ಫಸ್ಟ್ ನೈಟ್


தலையனையை கட்டி கொண்டால்
தலைவனின் கனவுகள்
தயக்கமின்றி கட்டிக்கொண்டேன்
அவனது நினைவுகளை..............
என் கூந்தலை மீட்டி
ஏன் மௌன ராகம் கேட்கின்றாய் .........
என் மலர் இதல்களை விரித்து
பெண்மையை எனோ உணர்கின்றாய் .........

என் கற்பனை குதிரையை கட்ட விழ்த்தி விட
கடிவாளம் இன்றி ஓடுகின்றதே ......

திண்ட திண்ட சுகம் தந்து
தேகம் எங்கும் மின்சாரம் ............

மீண்டும் மீண்டும் மனம் வந்து
வேண்டும் வேண்டும் என்கிறதே ..............

இரு விழி நடுவிலே ஒரு மோகம் வந்து
இமைகளை முடி கொள்கிறதே ..........

தடை களை மீறி கண்ணீர்த்துளிகள்
தலைவனைத் தீண்டி செல்கிறதே
சிற்பம் போல நீ செதுக்க
சிதைந்தே நானும் போகின்றேன்

மோகம் கொண்ட உன் சுவாசம்
மோசம் அடைய செய்கிறதே

இடையினை மெல்ல நீ வருட
மீண்டும் ஏங்கி போகின்றேன்

தொடங்கியே இடமே தெரியாமல்
தொலைத்து என்னை ரசிகின்றாய்..........

உரைவாழ கொண்டு நீ உரச
உரைந்து நானும் போகின்றேன்
வெப்பம் தப்பம் நீ கொடுத்து
என் தன் உயிரை ஏன் எடுகின்றாய்

வேட்கம் இன்றி நானும் கேட்டேன்
மீண்டும் இவ்விதம் செய்வாய்யோ

தனிமை இரவுகள் இனி வேண்டாமே
தலைவனே என் அருகில் நீ இருக்கையில்........................:)

அவனோடு உரையாடிய ஓர் நாள் இரவு ...............................


அவனோடு உரையாடிய ஓர் நாள் இரவு ...............................
உரக்கமே இல்லை
கண்ணாமூச்சி நாட்களில் பட்டாம்பூச்சியாய் பறந்த
அந்த நாட்களை பற்றி பேசினோம் ...........
விடலை பருவத்தில் விளையாடிய
கதைகளை சொல்லி ரசித்தோம் .............
சுட்டித்தனம் செய்த பிள்ளையாய் அவன் இருக்க
குட்டி குட்டி கதைகள் குறும்பாக இருந்தன ............
என் கோகுல கண்ணனுக்கு ஓர் ஆயிரம் கோபியராம்
அவன் செய்த லீலைகளை கேட்கையில்
குற்றமில்லா தூயஉள்ளம்
கள்ளமில்லா பிள்ளைமனம்
குறையில்ல தாயின் உள்ளம்
மாசில்லா வெள்ளை மனம்
விடியற்பொழுதில் அவன் உறங்க
மறுபடியும் விழித்துக்கொண்டடேன் - அவன் நினைவில்
அவன் கதைகளை சொல்லி என் கனவுகளை பறித்து கொண்டான்
தெளிவான என் மனநிலையில் சிறியதாய் ஒரு கல் விழ
கலங்கியது கண்ணாடி நீர் உருவானது கானல் நீர்
தடை செய்ய இயலா என் தடுமாற்றம்
விடை இல்லாமல் மயங்கி போனது ................

Thursday, July 29, 2010

For My Chinnu :)




மழையில் உடல் நினைந்து
அவன் நினைவில் மனம் நினைந்து..................

கற்பனயில் காதல் நிறைந்து
அவன் காதலில் கவிதை நிறைந்து...........

நிழலும் நிஜமாய் நீ இருக்க
என்றும் நீ என்னவன் ஆனாய்.................
நீ இன்றி என் வாழ்வில் நிறைவே இல்லை
உன் நினைவில் வரும் கவிதைக்கு குறைவே இல்லை...............:)

:)

காதல் இருமனம் சம்பந்தம் பட்டது
திருமணம் பலமனம் சம்பந்தம் பட்டது

Life :)

எதிர்புக்கள் வருவது இயற்கை.
எதிர்பாராமல் எதையு ம் எதிர் கொள்வதே வாழ்கை

To My Hero...........:)









மௌனமே கவிதை தான் உன் காதலின் முன்னே :)

Wednesday, July 28, 2010

என் உருவம் இல்ல உயிர்க்கு....:)

பனித்துளிகளை சேகரித்து அவன் உருவம் செய்தேன் .....
தேன்த்துளிகளை சேகரித்து அவன் உள்ளம் செய்தேன் .....
இருகரம் கொண்டு அவனை தீண்ட இமைகள் எனோ சிமிட்டவில்லை.........
தமிழ் மாத்திரை மறந்தேன் போலும் .................

Naa Bangaaru.............


புதியதோர் அனுபவம் புதுமையாய் இருகிறதே
சிரியதாய் உன் புன்னகை என்னை சிறகடித்து பறக்க செய்கிறதே
விடியலாய் உன் முகம் ஒளிர்கையில்
இருளினை எங்கும் காணவில்லை
காற்றாய் நீ என் அருகில் வருகையில்
கவிதைகள் என்னுள் பிறக்கிறதே
அழகாய் அரும்பிய உன் மீசை
அமைதியாய் என்னை கொள்கிறதே
குறிப்பாய் உன் குறும்பு பார்வை
என்னை உன்னுடன் கூ ட்டு சேர சொல்கிறதே...
சேர்வதில் தவறு இல்லை
பகுபதஉறுப்பு இலக்கணம் நமக்கு இல்லை........:)

How i Loss...........!!!


Search what You Loss
Search where where u Loss
Search will end ass your loss as gain ..........:) தொலைந்த இடமே தெரியாமல் தேடுகிறேன்

Tuesday, July 27, 2010

வாழ்கை

வீழ்வதற்கும், சாவதற்கும், அழுவதற்கும் அல்ல வாழ்கை வாழ்வதற்கே,
வாழ்ந்து காட்டுவோம்.
ஜெய்த்து காட்டுவோம். :) அனந்திகா :)

Hey Lovely :)


உன்னை என் காதல் என்பதா
இல்லை என் கவிதை என்பதா
என்ன மாயம் செய்தாய்
என்னை மறந்து நான் உன்னை நினைக்க
என் கண்ணின் கரு விழியில் உன்னை சுமக்க
என்னில் எனோ கலவரம் செய்தாய்
மெய் மொழியும் பொய் மொழியானது
பொய் மொழி என் தாய்மொழி ஆனாது
இன்று தாய் மொழியோ என் கவி மொழி ஆனாது

To My Sweet heart


என்னவென்று சொல்லுவேன் என்னவனை
தொலைதூரம் சென்றாலும் தொடர்ந்தே
என்னிடம் வருகின்றான்
தேய் பிறை வானில் தேன் நிலவாய்
என்னுள் மிளிர்கின்றான்
குளிர்கின்ற சூரியனை அவன் கண்களில் கண்டாலும் ..
சுடுகின்ற பனித்துளியை அவன் புன்னகையில் காணுகின்றேன்
கவிமழை என்பேன் அவன் நினைவுகள்
என்னுள் குடையாய் இருப்பதால்
பனி மழை
என்பேன் அவன் நினைவில்
நான் உரைவதல்
கனமழை என்பேன் அவன் நினைவுகளை
சுகமாய் சுமப்பதால்
அடைமழை என்பேன் என் கனவுகளில்
அவன் நினைவினை அடைவதால்
வேறு என்ன சொல்ல என் தாய் மொழியும்
நாணம் கொண்டு அவன் பின்னே நின்றது :)

To My Putta






நானும் கொண்டேன் நாணம் கொண்டேன் ..
உன்னை கண்ட முதல் நாள்... :)

At Last..................
களவும் கற்று மாற என்பது பழமொழி ...
காதலும் கற்று மறந்தேன் உன்னால் ... :)

To My kutta

அதிகாலை சூரியன் போல் அவன் முகம்
அன்றாடம் அவன் நினைவுகளே
விண்மின்களை தன் பக்கம் ஈர்க்கும் காந்த காண்கள்
எங்கெங்கும் அவன் உருவமே

To Chinnu

தலையனையை கட்டி கொண்டால்
தலைவனின் கனவுகள்
தயக்கமின்றி கட்டிக்கொண்டேன்
அவனது நினைவுகளை..............

என்னவனே...........

சுடரும் வரை சுகமாய் இருந்தது.
சுட்ட பின் ரணமாய் இருக்கிறதே.
தீ என்றால் திண்ட சுடுமோ.
வலியும் ஒரு வகை சுகம்தான்
வந்த பின் தெரிகிறது...அனந்திகா

Mi Romentica

Hey mi amor,No sé, dónde estás? ¿Quién es usted? ¿Qué u hacer? :)

My Gadi Putta....:)








காதல் என்னை உன் மடியில் குழந்தை ஆக்கியது
உன் கவி
தை என்னை பெண் ஆக்கியது....................

Monday, July 26, 2010

Hey Me Romántico


வார்த்தைகள் பேசவில்லை மௌனனங்கள் பேசியதே
கண்கள் காணவில்லை கனவுகள் காண்கிறதே
நாட்கள் நகரவில்லை உன் நினைவுகள் வருகின்றதே
உருவம் இல்லா எந்தன் உயிர் நீ
நேரில் நீ வருவாய் என்றால் கனவிலும் காத்திரூப்பேன்...என்றும் உன் நினைவுகளுடன் ... ...அனந்திகா:)

To My Chinnu :)


என் இனியவனுக்கு ,

செல்ல முத்தமிட நினைத்தேன்,
வெட்டி விட்டது நாணம்

கட்டிபிடிக்க நினைத்தேன்,
கட்டிபோட்டது மௌனம்

அடிமேல் அடி வைத்து நான் நடக்க
அடியே என்னும் குரலில் அரண்டு போனேன்
உன் குறும்பு ஆட்டத்தில்,

கரம் பிடித்து நீ நடக்க என் கவனம் சிதைந்து போனதேன் .....
தோல்மேல் நான் சாய்ந்திருக்க என்னில் தோல்வி கண்டு போனேன் ...

என் இந்த மாயம் ,
உன் அழகிய குறுகிய வட்டத்துக்குள் அடக்கி குற்றம் செய்த குற்றவாளி நீ .........

இனி என்

இனியவனே என் கண்களில் உன் தன் சிறைவாசம்
என்னவனே என்மனதில் உந்தன் வனவாசம்..........

என்ன பிழை செய்தாய் என்னிடம் நீ சிக்கி கொள்ள ............
.................................... என் பிரியா ஆயுள் கைதியே
எ ன்றும் உன் நினைவுகள் உடன் ........... அனந்திகா

To My God


ராதைக்கு சொந்தம் ஆனான்
சிதைக்கு சொந்தம் ஆனான்
கோதைக்கு சொந்தம் ஆனான்
பேதை எனக்கும் சொந்தம் ஆனவன்